இயேசு கிறிஸ்து போல உயிர்த்தெழுவேன்.. கைகளை கட்டி.. தன்னை தானே குழிதோண்டி புதைத்து.. பகீர் பாஸ்டர்
: மண்ணோடு மண்ணாக தன்னை புதைத்து கொண்ட பாதிரியார் உயிரிழந்தார்
ஜோகன்னஸ்பர்க்: இயேசு கிறிஸ்துவை போலவே தானும் 3 நாட்களில் உயிர்த்தெழுந்துவிடுவேன் என்று சொல்லி தன்னை தானே குழி தோண்டி புதைத்து கொண்டு உயிரிழந்த பாதிரியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பின மக்களின் பூமி ஆப்பிரிக்கா இப்போது வரை வளர்ச்சி பெறாத நாடாக உள்ளது.. இதில், நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் இன்னும் பின்தங்கியுள்ள ஒருநாடு தான் ஜாம்பியா...
இது ஒரு சிறிய ஊர்தான்.. ஆனால், அடிமைத்தன வாழ்க்கை, மூடநம்பிக்கைகளில் மக்கள் சிக்கி உள்ளனர்.. போதுமான கல்வி வளர்ச்சியும் இங்கு வரவில்லை.

மூடநம்பிக்கை
பெரும்பாலான மனிதர்கள் காட்டுமிராண்டிகளாகவும், மூட நம்பிக்கையில் திளைத்தவர்களாகவும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இப்படிப்பட்ட ஊரில் ஒருவர் அதிர்ச்சிகரமான காரியத்தை செய்துள்ளார்.. அவர் ஒரு பாஸ்டர்.. மிகவும் கடவுள் பக்தி உள்ளவர்... பல வருடங்களாகவே தனித்து வசித்து வந்தவர்.. இந்த பாதிரியார் பெயர் ஜேம்ஸ் சக்காரா.. 22 வயதுதான் ஆகிறது.

உயிர்த்தெழுதல்
இவர் தன்னை தானே இயேசு கிஸ்துவின் தூதுவர் என்று சொல்லி கொண்டு வந்துள்ளார்.. அது மட்டுமல்ல, போன ஜென்மத்தில் இயேசுவின் 14 சீடர்களுள் ஒருவராக இருந்தேன் என்றும் அந்த பகுதி மக்களிடம் சொல்லி பரபரப்பை கிளப்பி வந்துள்ளார்.. இந்நிலையில், சம்பவத்தன்று, நான் இயேசுவின் சீடன் என்தால் அவரை போலவே 3 நாட்களுக்கு பிறகு உயிரித்தெழுந்துவிடுவேன் என்று சொல்லி, தான் சார்ந்திருக்கும் சர்ச் பக்கத்திலேயே மண்ணில் குழித்தோண்டி, தன்னைத்தானே புதைத்து கொண்டார்..

உயிரிழப்பு
சவக்குழியில் பாதிரியார் போய் படுத்துக்கொண்டதுமே, அந்த சர்ச்சை சேர்ந்த இன்னொரு பாதிரியார் அவரது கைகளை கட்டியுள்ளார்... ஊழியர்கள் 2 பேர் வந்து, மண்ணை அள்ளி போட்டு அந்த இடத்தையே மூடியுள்ளனர்.. பிறகு 3 நாட்கள் கழித்து, பாதிரியார் வெளியே உயிருடன் எழுந்து வருவார் என்று காத்து கிடந்துள்ளனர்.. ஆனால், பாதிரியார் வரவே இல்லை.. பிறகுதான் அந்த பாதிரியார் மண்ணுக்குள்ளேயே உயிரிழந்தது தெரியவந்தது.

சடலம்
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்... போலீசாரும் விரைந்து வந்து பாதிரியாரின் சடலத்தை தோண்டி எடுத்து சென்றனர்.. நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணையும் நடத்தி,மற்றொரு பாதிரியாரை கைது செய்தனர்.. ஆனால், மண்ணை போட்டு குழி தோண்டி புதைத்த சர்ச் ஊழியர்கள் 2 பேரை காணோமாம்.. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்...!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications