லெபனான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி.. 24 பேரை கொன்ற ஏவுகணைகள்! அமெரிக்கா சமரச முயற்சி
டெல்அவிவ்: பாலஸ்தீனத்துடனான மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. நேற்று இஸ்ரேல் மீது லெபனான் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல், தனது தாக்குதல் மூலம் 24 பேரை கொன்று குவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது. போரில் ஹமாஸ் தலைவர்களுடன் சேர்த்து 40,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸுடன் நிற்காமல், லெபனானுக்கும் தன்னுடைய தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. லெபனானிலிருந்து இருந்து இயங்கும், ஹிஸ்வுல்லா அமைப்பு, ஹமாஸுக்கு உதவுவதாகவும், இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே லெபனான் மீது இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரை தொடுத்திருக்கிறது. நேற்று இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லெபனான் ராக்கெட்களை கொண்டு இஸ்ரேலை தாக்கியது. இதில் 7 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 4 பேர் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், 3 பேர் இஸ்ரேலியர்கள் எனவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தவிர, காசாவில் இயங்கி வந்த கடைசி மருத்துவமனையையும் இஸ்ரேல் தாக்கி அழித்திருக்கிறது. இதன் மூலம் காசாவில் டயாலிசிஸ் நோய்க்கான மருத்து தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில்தான் அனைத்து முக்கிய மருந்துகளும் இருந்திருக்கின்றன. அதேபோல இந்த தாக்குதல் மூலம் காசாவில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஹமாஸ் தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் போர் உடனடியாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏற்கெனவே பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புதிய தாக்குதல் மீண்டும் விவாதமாக வெடித்திருக்கிறது.
இதே நிலை நீடித்தால் போர் மிக விரைவில் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவும் எனவும் அச்சம் எழுந்திருக்கிறது.
-
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications