நேபாளம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி; 20 பேர் படுகாயம்
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நோபாள நாட்டில் உள்ள கோடாங் மாவட்டத்தில் இருந்து காத்மாண்டு நகருக்கு சென்ற பஸ்சில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் அந்த பஸ் ஆர்கான்லே என்ற இடத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் 24 பேர் பலியாகினர். 20 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். பஸ் இரண்டு மரங்களுக்கு நடுவே சிக்கியதால், பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்ததாக கோடாங் போலீசார் தெரிவித்தனர்.
நேபாள நாட்டில் மலைப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் அடிக்கடி பேருந்து விபத்துக்கள் நடப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications