நார்வேயில் சோகம்... பைசர் தடுப்பூசி போட்ட 29 முதியவர்கள் உயிரிழப்பு!
ஒஸ்லோ: நார்வே நாட்டில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்ட 29பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பல்வேறு சந்தேகங்கள்
உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகினறன. இந்த நிலையில் நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்ட 29பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

29பேர் உயிரிழப்பு
பைசர் தடுப்பூசி செலுத்தப்பெற்ற 29முதியவர்கள் உயிரிழந்ததாக நார்வே அரசு தெரிவித்துள்ளது. இது தவிர இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த இறப்புகள் குறித்து விசாரணையை நார்வே அரசு முடுக்கிவிட்டுள்ளது. பலவீனமான உடலைக் கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பாதகமான எதிர்வினைகள் இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிரடி முடிவு
ஆனால் அவர்கள் பைசர் தடுப்பூசியால்தான் இறந்தார்கள்? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இறந்த 23 பேரில் 13 பேர் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர் முடிவு செய்தது.

எச்சரிக்கை
மேலும் 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எதிராக நார்வே பொது சுகாதார நிறுவனம் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்கள் தடுப்பூசியால் பெரிதும் பயனடையமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் இருந்து இதுவரை நார்வேயில் பைசர் மற்றும் மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை 30,000-க்கும் மேற்பட்டோர் பெற்றுள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications