அமெரிக்காவில் பள்ளிக்கு 14 பொட்டலங்களில் போதைப் பொருள் கொண்டு வந்த 3 வயது சிறுமி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் 3 வயது சிறுமி பள்ளிக்கு 14 பொட்டலங்களில் போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் ஹார்லம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரது பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அதில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனப்படும் போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தது.
அவர்கள் உடனே பள்ளிக்கு விரைந்து வந்து போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். சிறுமியிடம் விசாரித்துவிட்டு அவரை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியின் தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் தான் போதைப் பொருளை சிறுமியின் பள்ளிப் பையினுள் வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மெனாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications