Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பசிபிக் கடலில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த "மம்மி" கடற்கன்னி.. கறி சாப்பிட்டால் இறப்பு இல்லை.. ஆய்வு

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: 300 ஆண்டுகள் பழமையான கடற்கன்னி வடிவில் கிடைத்துள்ள மம்மியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

மம்மிக்கள் என்பது குறிப்பிட்ட ஒரு காலத்தில் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப் பொருள்களை கொண்டும் கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு.

அவ்வாறு காலத்தால் அழியாக மனித மம்மிகளையும் விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜப்பான் பசிபிக் கடல்

ஜப்பான் பசிபிக் கடல்

அந்த வகையில் ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே ஒரு மம்மி கிடைத்துள்ளது. இது பார்ப்பதற்கு கடல் கன்னி போலவே இருக்கிறது. இது வெறும் 12 இன்ச் மட்டுமே நீளமாக உள்ளது. இது 1736- 1741 ஆம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மீனவர்கள் வலையில் சிக்கிய மம்மி

மீனவர்கள் வலையில் சிக்கிய மம்மி

அந்த மம்மி கைப்பற்றப்பட்ட போது அசோகுசி நகரத்திலுள்ள கோயிலில் இருந்திருக்கிறது. ஜப்பானின் அசாகி ஷிம்புன் என்ற செய்தித் தாள் அளித்த தகவலின்படி கைப்பற்றப்பட்டுள்ள மம்மி பசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் கிடைத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மம்மியை கைப்பற்றிய மீனவர்கள் அதை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்தனர்.

கூர்மையான பற்கள்

கூர்மையான பற்கள்

பின்னர் அதை கோயிலில் வைத்துள்ளனர். இந்த மம்மிக்கு கூர்மையான பற்கள் காணப்படுகிறது. முகமும் விகாரமாக அச்சத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. இரண்டு கைகள் உள்ளன. தலையில் முடி, புருவம், கண்கள் ஆகியவை உள்ளன. இப்படி அதன் மேற்பகுதி மனிதனின் முக அமைப்புடன் ஒற்று உள்ளது.

வால் பகுதி

வால் பகுதி

ஆனால் கீழ் பகுதியோ மீன்களுக்கு இருப்பது போல் உள்ளது. குறிப்பாக கீழ் பகுதியில் மீன்களை போல செதில்கள் மற்றும் வால் போன்ற குறுகிய முனை காணப்படுகிறது. சுருக்கமாக சொல்ல போனால் கடற்கன்னியை போல் காணப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிடி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Recommended Video

    Egypt Mummy | ராஜாவின் மம்மி..வியக்க வைத்த சம்பவம் | Oneindia Tamil
     800 ஆண்டுகள் வாழ்ந்த பெண்

    800 ஆண்டுகள் வாழ்ந்த பெண்

    இதுகுறித்து ஓகாயாமா நாட்டுப்புற கழகத்தை சேர்ந்த ஹிரோஷி கினோஷிதா கூறுகையில், ஜப்பானை சேர்ந்த கடற்கன்னிகளுக்கு அழியா தன்மை உள்ளது. இதனால் அதன் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இறப்பே இல்லை என சொல்கிறார்கள். இது போல் ஒரு பெண் கடற்கன்னியின் மாமிசத்தை சாப்பிட்டு 800 ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தார் என்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+