பெர்லின் சுவர் வீழ்ந்து.. 30 வருஷமாச்சு.. ஜெர்மானியர்கள் நெகிழ்ச்சி!
பெர்லின் : கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரித்த சுவர் இடிப்பின் 30வது ஆண்டு தினத்தை ஜெர்மனி அனுசரித்தது. இதில் அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டேய்ன்மேயர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்கள், அந்த சுவற்றின் எஞ்சிய பகுதிகளில் மலர்களை வைத்து மரியாதை செலுத்தினர்.
பெர்லின் சுவர் வீழ்ச்சியின் இந்த 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கூகுள், டூடுள் வெளியிட்டது. மேலும் நமது பிரதமர் மோடியும் அயோத்தி விவகாரம் குறித்த தன்னுடைய உரையில், இந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.

ஜெர்மனியை பிரித்த சுவர் இடிப்பு
கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரித்துவந்த சுவர் இடிக்கப்பட்டு அவை இரண்டும் ஒன்றாக இணைந்ததன் 30வது ஆண்டு நினைவு தினத்தை ஜெர்மனி கொண்டாடியது. இந்த இடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பெர்லின் சுவர் உருவாக்கம்
2ம் உலகப்போரின் விளைவாக சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் கடுமையான அழுத்தங்களை சந்தித்துவந்த ஜெர்மனியில் கிழக்கு மற்றும் மேற்கு மக்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த இந்த சுவர் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

குடும்பங்கள் இணைந்த நிகழ்வு
கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியர்களின் பயணக் கட்டுப்பாட்டை நீக்க கிழக்கு ஜெர்மனி முன்வந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெர்லின் சுவற்றை கடந்த 1990ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஜெர்மனியர்கள் தகர்த்தனர். இதன்மூலம் இரண்டு பகுதிகளை சேர்ந்த குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக இணைந்தனர்.

30வது ஆண்டு நினைவுதினம்
சோவியத் யூனியன் முற்றிலும் வீழ்ந்து ஜெர்மனி புதிய சகாப்தத்தை துவங்கிய நிலையில், இந்த சுவர் இடிப்பின் 30வது ஆண்டுதினம் நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பூங்கொத்துகள் வைத்து மரியாதை
இந்த கொண்டாட்டத்தில் ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் கலந்துகொண்டு, உரையாற்றினார். மேலும் சுவற்றின் எஞ்சிய பாகங்களில் பூங்கொத்துக்களை வைத்து மரியாதை செலுத்தினார்.

அமைதியான புரட்சி
பெர்னாயர் ஸ்ட்ராஸ் பெர்லின் சுவர் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர், மக்களின் தைரியம், சுதந்திரம் குறித்த வேட்கை இல்லாமல் அமைதியான இந்த புரட்சி நடைபெற சாத்தியம் இல்லை என்று புகழாரம் சூட்டினார்.

நினைவிடத்தில் பூங்கொத்து
இந்த நிகழ்வின்போது, ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்களும் நினைவிடத்தில் பூங்கொத்துகளை வைத்து மரியாதை செலுத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications