தான்சானியாவில் பேருந்து பள்ளத்தில் உருண்டு விபத்து: 29 மாணவர்கள் உள்பட 34 பேர் பலி
தான்சானியா நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 மாணவர்கள் உள்பட 34 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோடோமா: தான்சானியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள் 34 பேர் பரிதாபமாக பலியாகினர். ஆசிரியர் இருவர் உள்பட 32 பேர் பலியாகினர்.
தான்சானியாவில் உள்ள அருஷா மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பேருந்து ஒன்றில் ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள்.
பேருந்து மியாட்டு மாவட்டத்தில் உள்ள மிலேரா ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பெரிய பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள், 29 மாணவர்கள் மற்றும் பஸ் டிரைவர் என 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 12 பேர் மாணவர்கள், 17 பேர் மாணவிகள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தான்சானியாவில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் உயரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.