அதிகாலையில் குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென பூமி குலுங்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தியா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் இறந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் துருக்கி பெரிய பாதிப்பை சந்தித்தது. இதையடுத்து நிலநடுக்கம் குறித்து மக்கள் அதிக பயத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலநடுக்கம் அடிக்கடி உணரப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தான் இன்று அதிகாலையில் ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது.
இதுபற்றி தேசிய நிலஅதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛மே 9ம் தேதி அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கு 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 என பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 120 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமீபகாலமாக தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications