For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்தாரில் ஆழ்துளைக் கிணற்றை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சுத் திணறி பலி

Google Oneindia Tamil News

துபாய்: கத்தாரில் ஆழ்துளைக் கிணற்றை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார்கள்.

அரபு நாடான கத்தார் தலைநகர் டோகாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஆழ்துளை கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் இருந்தனர். கிணற்றிற்குள் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்த போது, திடீரென அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்.

பலியான 4 இந்தியர்களின் விவரமாவது, கேரள மாநிலத்தை சேர்ந்த இசாக் (வயது26), பாசில் (30), முனீர் (20) மற்றும் முகம்மது ஆகியோர். பலியானவர்கள் அரபு நாட்டில் தனியார் நிறுவன காண்டிராக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
At least four Indians have died of suffocation in Qatar while working in a sewage manhole.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X