பாகிஸ்தானில் 4 வயது சிறுவனை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர், 3 பேர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பள்ளி ஒன்றில் படிக்கும் 4 வயது சிறுவனை பள்ளி முதல்வர், காவலாளி மற்றும் 2 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ளது தார்-இ-அர்காம் பள்ளி. அங்கு படித்த 4 வயது சிறுவனை பள்ளி முதல்வர், காவலாளி மற்றும் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சுயநினைவை இழந்த சிறுவனை அவர்கள் பள்ளியிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளி முதல்வர் மற்றும் 3 ஆண்களையும் பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் காவலாளியை கைது செய்தனர்.

மீதமுள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+