பாகிஸ்தானில் 4 வயது சிறுவனை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர், 3 பேர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பள்ளி ஒன்றில் படிக்கும் 4 வயது சிறுவனை பள்ளி முதல்வர், காவலாளி மற்றும் 2 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ளது தார்-இ-அர்காம் பள்ளி. அங்கு படித்த 4 வயது சிறுவனை பள்ளி முதல்வர், காவலாளி மற்றும் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சுயநினைவை இழந்த சிறுவனை அவர்கள் பள்ளியிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளி முதல்வர் மற்றும் 3 ஆண்களையும் பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் காவலாளியை கைது செய்தனர்.
மீதமுள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.