''மாப்ளே, வர்ற புதன்கிழமை செவ்வாய் கிரகத்துக்கு கிளம்புறேன்''..!

நெதர்லாந்தை சேர்ந்த 'மார்ஸ் ஒன்' என்ற லாபநோக்கமற்ற அமைப்பு, செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்வதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் கடந்தாண்டு அறிவித்தது. இதையடுத்து உலகெங்கும் இருந்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அதில், கடந்தாண்டு டிசம்பரில் 1058 பேரை அந்த அமைப்பு தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களில் 62 பேர் இந்தியர்களாக இருந்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் உடல் நலம் நன்றாக உள்ளது என்பதற்கான மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதில் சிலர் தேர்ச்சி பெற முடியாததால் தற்போது 705 பேர் மட்டும் செவ்வாய்க்கு புறப்பட தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 44பேர் இந்தியர்கள்.
இந்தியர்களில் 17 பேர் பெண்களாகும். புதுடெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், புனே ஆகிய நகரங்களில் இருந்து இந்த நாற்பத்தி நான்குபேரும் தேர்வாகியுள்ளனர். உலகமெங்குமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 418 ஆண்கள், 287 பேர் பெண்கள்.
அதிகப்படியாக அமெரிக்காவில் இருந்துதான் 313 பேர் தேர்வாகியுள்ளார். அடுத்ததாக ஐரோப்பாவில் இருந்து 187 பேரும், ஆசியாவிலிருந்து 136 பேரும், ஆப்பிரிக்காவில் இருந்து 41 பேரும் இந்த மிஷனுக்கு தேர்வாகியுள்ளனர். 2024ம் ஆண்டு இவர்கள் செவ்வாயை நோக்கி பயணிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications