சீனாவில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு: 45 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனா - மியான்மர் நாடுகளின் எல்லைப்பகுதியில்,சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகி உள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீனா, மியான்மர் எல்லை பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 15 நகரங்களில் உள்ள சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.
மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை அடுத்து எல்லையோரங்களில் வசித்து வந்த கிராம மக்கள் மியான்மரில் தற்காலிக குடியிருப்பு அமைத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலும் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications