யு.எஸ். 'நன்றி கூறும் நாளில்' கொல்லப்படும் 4.5 கோடி வான்கோழிகள்!
நியூயார்க்: அமெரிக்காவில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நன்றி கூறும் நாளில் (Thanksgiving) மட்டும் சுமார் 4.5 கோடி வான்கோழிகள் இறைச்சிக்காகவே கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் நாளில் 2.2 கோடி வான்கோழிகள் கொல்லப்படுகின்றனவாம்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை நன்று கூறும் நாளாகவும் அதற்கடுத்த நாள் கருப்பு வெள்ளியாகவும் கடைபிடிக்கப்படுவது வழக்கம். பொதுவாக அமெரிக்காவில் கோழிகளைப் போலவே வான்கோழி இறைச்சியும் சம அளவில் உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 30 கோடி வான்கோழிகள் இறைச்சாகவே அமெரிக்காவில் கொல்லப்படுகின்றன. அதுவும் நன்றிகூறும் நாளில் மட்டும் சுமார் 4.5 கோடி வான்கோழிகளும் கிறிஸ்துமஸ் நாளில் 2.2 கோடி வான்கோழிகளும் கொல்லப்படுகின்றன.
பொதுவாக வான்கோழிகள் ஒரு மணி நேரத்டுக்கு 55 மைல்கள் தூரம் பறக்கக் கூடியவை. ஒரு மணி நேரத்துக்கு 18 மைல் தொலைவு ஓடக் கூடியவை. அதன் வாழ்நாள் காலம் 10 ஆண்டுகள்.
ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த வாழ்நாளெல்லாம் கிடையாவே. பிராய்லர் கோழிகளைப் போலவே உருவாக்கப்படும் இந்த வான்கோழிகள் 5 அல்லது 6 மாத காலத்திலேயே இறைச்சிக்காக அனுப்பப்பட்டு விடுகின்றன. அவற்றின் வாழ்க்கையில் எந்த ஒரு வசந்த காலமும் வந்து போவதில்லை.
இப்படி இறைச்சிக்காக அனுப்பும் போது காயமடைந்த வான்கோழிகளை கொல்லும் முறைகள் குறித்து சில பறவைகள் நல அமைப்பினர் கவலையும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications