5000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது.. தொடரும் சோதனையால் மலேசியாவில் பதற்றம்
மலேசியாவில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வெளிநாட்டைச் சேர்ந்த 5000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்குப் பதற்றம் நிலவுகிறது.
கோலாலம்பூர்: மலேசிய குடிவரவுத்துறை கடந்த ஜூலை 1 முதல் நடத்திய சோதனைகளில் 5,065 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் வேலைச் செய்வதற்கான முறையான ஆவணங்கள் இவர்களிடம் இல்லாமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் முறையாகப் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது.

5000 பேர் கைது
அந்தக் கெடு கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்ததையடுத்து, மலேசிய குடிவரவுத்துறை சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன்படி கைது செய்யப்பட்டுள்ள 5,065 தொழிலாளர்களில் 1,520 வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். 1,476 இந்தோனேசியர்கள், மியான்மரைச் சேர்ந்த 429 பேர், வியட்நாமைச் சேர்ந்த 285 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 206 பேர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 261 ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18000 பேரிடம் சோதனை
இவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காகப் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 108 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. "மொத்தம் 17,955 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணி ஆவணங்களற்ற 5,065 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் முஸ்தாபர் அலி தெரிவித்துள்ளார்.

ஆள் கடத்தல்
பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான, கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஊதியம் இன்றி துரத்தப்படும் அவலம்
லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு அமர்த்துபவர்கள் எந்தவித ஆவணங்களுமின்றி இவர்களைப் பணியில் வைத்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட அளிக்கப்படாமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன.

சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புதல்
32 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்டுள்ள மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதே 2 மில்லியன் அளவிலான பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் உள்ளதாக அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications