ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நகரில் 5.23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். நிலநடுக்கம் 28 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications