செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் தேர்வு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மக்கள் குடியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து 140 நாடுகளில் இருந்து 20,000 இந்தியர்கள் உள்பட சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

earth and mars

"நல்ல உடல்நலம், மன உறுதியுடன் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப முடியாது. அங்கேயே மக்கள் வாழத் தகுந்த குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு தங்க வைக்கப்படுவர்," என்று மார்ஸ் ஒன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்தப் பயணம் 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு செல்லவிருக்கும் நபர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் தரவிருக்கிறது இந்த நிறுவனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+