முகத்தோடு முகம் உரசி பெண் பயணியிடம் சேஷ்டை... 62 வயது இந்தியர் கைது
நியூயார்க்: பக்கத்து இருக்கையில் பயணித்த பெண்ணின் முகத்தோடு முகம் உரசி சில்மிஷம் செய்த 62 வயது இந்தியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 62 வயது தேவேந்தர் சிங். இவர் ஹூஸ்டனிலிருந்து நியூயார்க்குக்கு விமானத்தில் பயணித்துள்ளார். அவரது பக்கத்து இருக்கையில் அமெரிக்கப் பெண் ஒருவர் பயணித்தார்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது அருகே இருந்த பெண், சிங் பக்கமாக முகத்தைத் திருப்பியடி தூங்கியுள்ளார். இதைப் பார்த்த சிங், தானும் தூக்க கலக்கத்தில் சாய்வது போல அவரது முகத்துக்கு அருகே போய் சாய்ந்து கொண்டு முகத்தோடு முகத்தை உரசி சில்மிஷம் செய்துள்ளார் சிங். இதனால் அந்தப் பெண் கோபமடைந்தார். கத்திக் கூச்சலிட்டார்.
இதையடுத்து விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க்கை விமானம் வந்தடைந்ததும் விமான ஊழியர்கள் சிங்கை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் சிங்கைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஊரு விட்டு ஊரு வந்து இந்த வயதில் இதெல்லாம் தேவையா சர்தார்ஜி...!