நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 7.1 ஆக பதிவு
வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானது.
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியான ஜிஸ்போர்ன் என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அதேபோல, நிலநடுக்கத்தின் அதிர்வு பல இடங்களில் உணரப்பட்டாலும், உடனடியாக ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட் சேதம் குறித்த உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தாலி நாட்டில் நோர்சியா என்ற நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகி இருந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர். மேலும், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.