For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.5ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Google Oneindia Tamil News

மாஸ்கோ : ரஷ்யாவின் குரில் தீவுகளில் பயங்கர நிலநடுகம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.8 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

ரஷ்யாவின் குரில் தீவுகளில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவானது.

 7.5-magnitude earthquake strikes Russia

இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரிக்கப்பட்டது. இதேபோல் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஹவாய் தீவுகளையும் சுனாமி அலைகள் தாக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டது.

ஆனால் மிகச் சிறிய அளவிலான சுனாமி அலைகளே குரில் தீவுகளைத் தாக்கின. மேலும் அமெரிக்காவின் கடற்கரை பகுதியைத் தாக்கக் கூடிய வலிமையான சுனாமி அலைகள் இவை இல்லை என்பதால் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

அதேநேரத்தில் குரில் தீவுகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

English summary
A 7.5-magnitude quake hit off Russia's Kuril Islands today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X