சிலியில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது... சுனாமி எச்சரிக்கை வாபஸ் #puertomontt
சிலி நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
சான்டியாகோ: சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 7.7 ரிக்டராக பதிவானது.
தெற்கு சிலியில் உள்ள பியூர்டோ மான்ட்டுக்கு தென் மேற்கே 1240 மைல் தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்குக் கீழே 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.
லாஸ் லாகோஸ் பகுதி முழுவதும் கடலோரத்தில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த சிலி தேசிய அவசர நிலை துறை உத்தரவிட்டுள்ளது.
பயோபியோ, அரகசினா, லாஸ் ரியோஸ், அய்சன் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நிலநடுக்கம் காரணமாக 3 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம் இருந்த பகுதிக்கு அருகில் உள்ள குல்லான் என்ற நகரம்தான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications