சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி; 95 பேர் படுகாயம்
பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 7 பேர் பலியாகினர். 95 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது ஷான்ஜி மாகாணம். இங்குள்ள ஜின்மின் நகரில் இன்று குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வெடி விபத்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. இதில், ஒரு கட்டிட வேலை நடந்து வந்த வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அதன் அருகில் உள்ள கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. வெடிவிபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர். மீட்புக்குழுவினர் 7 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 945 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது வெடிவிபத்தா அல்லது குண்டுவெடிப்பா என உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது. சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் வெடிப்பொருட்களை சேமித்து வைத்திருந்தது, இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications