மனிதர்களுக்கு பரவ அதிக வாய்ப்பு.. கொரோனா போல் 8 புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! பகீர் கிளப்பும் சீனா
பெய்ஜிங்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. இந்நிலையில் தான் சீனாவில் தற்போது புதிய 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் மனிதர்ளை தாக்கும் தன்மை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது.

இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மேலும் மாநிலங்கள், நாடுகள் இடையேயான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது.
2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் பயோ வாரை தொடங்குவதற்காக சீனா மேற்கொண்ட ஆய்வின்போது கொரேனாா வைரஸ் வெளிப்பட்டு உலகம் முழுவதும் பரவியதாக சில தலைவர்கள் புகார் தெரிவித்தன. ஆனால் சீனா தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் என்பது சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவியது என பல நாடுகளால் நம்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹைனான் தீவில் தான் புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எதிர்காலங்களில் கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அதில் இருந்து மனிதர்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதற்கு சீன அரசு உதவி செய்து வருகிறது. இந்த ஆய்வின்போது வவ்வால்கள் உள்பட கொறித்துண்ணும் உயிரினங்களிடம் இருந்து 700 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் தான் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கண்டறியப்பட்டுள்ள 8 வைரஸ்களில் ஒரு வைரஸ் என்பது SARS-CoV-2 எனும் கொரோனா வைரசுக்கான குடும்பத்தை சேர்ந்ததாகும். இந்த புதிய வைரஸ்கள் பரவ தொடங்கினால் மனிதர்களையும் தாக்கும் தன்மையை கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரம் வைரலாஜிகா சினிமா எனும் இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் இந்த தகவல் என்பது தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications