பூனைதான் கொல்ல முயற்சித்தது... மூதாட்டி கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் திருப்பம்
ஜப்பானில் மூதாட்டி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் பூனை ஒன்று முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
டோக்கியோ: ஜப்பானில் மூதாட்டி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் பூனை ஒன்று முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இதுவரை கிடைத்த தடயங்களின் அடிப்படையில் பூனைதான் கொலை முயற்சியை செய்து இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தாக்கப்பட்ட அந்த மூதாட்டியின் முதல்கட்ட வாக்குமூலம் அதுகுறித்து அதிர்ச்சியான தகவல்களை தருகிறது.
தற்போது டோக்கியோ போலீசார் இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணின் உறவினர்களை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ரத்த வெள்ளத்தில் மூதாட்டி
ஜப்பானின் டோக்கியோ நகரில் 'மயாகோ மாட்சுமோட்டா' என்ற 80 வயது நிரம்பிய மூதாட்டி தனது மகளுடன் வசித்து வந்தார். இவரது மகள் பொருட்கள் வாங்க வெளியே சென்று விட்டு திரும்பிய போது அவரது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்து இருக்கிறார். அவர் முகம் முழுக்க கீறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது தாயை உடனாடியாக் மருத்துமனையில் அனுமதித்தார்.

போலீசார் தீவிர விசாரணை
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார். அந்த வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அந்தப் பெண் வீட்டை வெளியே பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்று இருக்கிறார். மற்ற எல்லா பகுதியின் கதவுகளும் பூட்டி இருந்திருக்கின்றன. இதனால கொலைகாரன் எப்படி உள்ளே வந்த இருப்பான் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி இருக்கிறது. மேலும் அங்கு புதிய மனிதர்களின் எந்த கை ரேகையும் பதியவில்லை.

பூனைதான் முதல் குற்றவாளி
இதையடுத்து அந்த மூதாட்டிக்கு சில நொடிகள் நினைவு திரும்பி இருக்கிறது. அப்போது அவர் 'பூனை' என்று கூறி இருக்கிறார். இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் இருந்த பூனையின் மீது தங்கள் சந்தேகத்தை திருப்பி உள்ளனர். மேலும் அந்த பாட்டியின் முகத்தில் ஆழமாக இருந்த கீறல்கள் அனைத்தும் பூனையின் நக கீறல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனையை தேடும் போலீஸ்
தற்போது அந்த பூனையை இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக்கி இருக்கின்றனர். மேலும் அந்த பூனை மூதாட்டி தாக்கப்பட்ட நொடியில் இருந்து காணாமல் போய் இருக்கிறது. தற்போது போலீசார் பூனையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த மூதாட்டி நினைவு திரும்பினால் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் விலகும் என கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications