மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி
பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் திட்டமான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், இம்மாதம் கிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது
பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது கடல் கடந்து பஹ்ரைனில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அதன்படி வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல், மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், மற்றும் ரத்த தான குழு, தொழிலாளர்களின் நலன், வேலை வாய்ப்புகள், குழந்தைளுக்கு தரமான இலவச கல்வியை வழங்க ஒளவையாார் கல்விக்கூடம் உள்ளிட்ட பல சேவைகளை முன்னெடுத்து செய்து வருகிறது

நெகிழ வைக்கும் மருத்துவ சேவை
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் திட்டம் கடந்த வெள்ளியன்று அதாவது ஜூன் 14ம் தேதியான நேற்று செயல்படுத்தப்பட்டது இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்

பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை,ஆலோசனை
கிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். இம்முகாமில் பல் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.

இலவச சேவையால் 5,000 பேர் பலன்
இந்த மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் திட்ட நிகழ்ச்சியின் போது பேசிய சமூகநலத்துறை செயலாளர் நோ.கி. பிரவீன், "மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்" என்ற திட்டம் கடந்த 2017 நவம்பர் மாதம் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூகநலத்துறை சார்பாக தொடங்கப்பட்டது. இம்மாதம் வரை மிகச்சரியாக 17 இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றதன் மூலம் சுமார் 5000 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.

சங்கத்தின் செயல்பாடுகளால் பெருமை
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவரான முனைவர். பெ. கார்த்திகேயன் பேசும் போது "உலகிலேயே மாதமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்துவது நமது அமைப்பு மட்டும்தான்" என்று குறிப்பிட்டார். சங்க பொது செயலாளர் க. செந்தில்குமார், மங்கையர் குழு அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிம்ஸ் மருத்துவமனையின் விற்பனை அதிகாரி இராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் பெருமை கொள்ளும் விதமாக இருப்பதாக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் உற்சாகத்துடன் கூறினர்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications