காதலி உயிர் விட்ட இடத்திலேயே விபத்தை ஏற்படுத்தி உயிரிழந்த காதலன்!
தைவான் : விபத்தில் காதலி உயிரிழந்த இடத்திலேயே காதலனும் செயற்கையாக விபத்தை ஏற்படுத்தி உயிரை விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் ஊடகங்களில் 26 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் சாலையில் காரில் செல்லும் போது லாரி மோதிய விபத்தில் பலியானதாக செய்தி வெளியானது.

இறந்த இளைஞரின் பெயர் செங் ஜெங் குயாங். இதே இடத்தில்தான் 22 வயதான அவரது காதலி செங் ஷான் யுன் இதே போன்ற விபத்தில் உயிரிழந்தார். சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, காதலன் செங்கும் அதே போன்ற விபத்தில் பலியாகியுள்ளார்.
காதலி இறந்த துக்கத்தில் காதலன் வேண்டும் என்றே விபத்தை உருவாக்கி அதில் பலியாகியிருக்கிறார். இந்த விபத்திற்கு பிறகு அவரது காரை சோதனையிட்ட போலீசார் காரில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருந்தது தெரிய வந்து உள்ளது.
மேலும் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்த நாளிதழில், காதலி உயிருடன் இருக்கும் போது தனது காதலன் தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாக தனது தோழியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது...அவன் என்னை விட்டு விலக மறுக்கிறான்.அவன் என்னை கொலை செய்ய நினைக்கிறான் என கூறியுள்ளதாகவும் நாளிதழில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications