கணவனால் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் பெண்.. 8 வருடங்களுக்கு பின் மறுமணம் செய்து திரும்பிய அதிசயம்!
பாகிஸ்தானில் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து போனதாக கருதப்பட்ட அஸ்மா பீபி என்ற பெண் தற்போது உயிருடன் வந்துள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து போனதாக கருதப்பட்ட அஸ்மா பீபி என்ற பெண் தற்போது உயிருடன் வந்துள்ளார். அதோடு அவர் நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்மாவின் முதல் கணவர் இபார் அஹமது இதுகுறித்து போலீசில் வழக்கு பதிந்துள்ளார்.
இபார்தான் அஸ்மாவை கொன்றார் என்று ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அஸ்மா உயிருடன் திரும்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2009ல் நடந்த திருமணம்
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்பில் வசித்து வரும் அஸ்மாவிற்கும், இபாருக்கும் கடந்த 2009ல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் நடந்ததில் இருந்தே இவர்கள் இருவருக்கு இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2010ம் வருடம் அஸ்மா மர்மமான முறையில் காணாமல் போனார்.

இறந்துவிட்டார்
அஸ்மா கொலை செய்யப்பட்டுவிட்டதாக கூறி இபார் போலீசால் கைது செய்யப்பட்டார். பின் கோர்ட் மூலம் அஸ்மாவின் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் கடைசியில் அஸ்மாவின் தந்தை இபாரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர் கொடுத்த புகாரை திரும்ப பெற்றார். அஸ்மா இறந்த வழக்கும் அப்படியே முடித்து வைக்கப்பட்டது.

மீண்டும் வந்துள்ளார்
இந்த நிலையில் 8 வருடங்களுக்கு பின் அஸ்மா, நீலம் என்று பெயரை மாற்றிக் கொண்டு மீண்டும் அவர் ஊருக்கே வந்துள்ளார். தன்னுடைய முன்னாள் காதலன் நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார். அவர்கள் துபாயில் இவ்வளவு வருடம் வசித்துள்ளார். வீட்டை விட்டு 8 வருடங்களுக்கு முன்பு ஓடியதாக கூறியுள்ளார்.

புகார்
அந்த பெண்ணுக்கு 6 குழந்தைகள் வேறு பிறந்துள்ளது. தற்போது இந்த பெண்ணின் மீது கணவனை ஏமாற்றுதல், முறையற்ற இரண்டாவது திருமணம் என்ற நிறைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதல் திருமணத்திற்கு முன்பே நசீரை காதலித்ததாக அஸ்மா கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications