அமெரிக்காவில் மதுக்கடையை சூறையாடிய விலங்கு... மது பாட்டில்களை திருடி குடிக்கும் அரிய உயிரினம்
அமெரிக்காவில் காணப்படும் 'ஒப்பசம்' என்ற அரியவகை உயிரினம் ஒன்று அங்கு இருக்கும் மதுக்கடையில் திருடி மது குடித்து இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் காணப்படும் 'ஒப்பசம்' என்ற அரியவகை உயிரினம் ஒன்று அங்கு இருக்கும் மதுக்கடையில் திருடி மது குடித்து இருக்கிறது. இந்த உயிரினத்தின் தொல்லை நாளுக்கு நாள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த உயிரினத்தை சிறிய கூண்டு செய்து அதில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது அந்த உயிரினம் அமெரிக்கா முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த உயிரினம் இது போன்ற தவறான செயல்கள் பலவற்றை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அரிய வகை ஒப்பசம்
அமெரிக்காவில் அரிதாக ஒப்பசம் என்றொரு உயிரினம் காணப்படுகிறது. மரங்களில் வாழும் இந்த உயிரினம் அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக இருக்கும். மிகவும் குறும்புக்கார உயிரினமான இது மிகவும் ஆபத்தான விலங்கும் கூட. இது மனிதர்களை மிக எளிதாக கடித்து தாக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த உயிரினம் மீது மக்கள பல்வேறு காரணங்களால் கோபத்தில் இருக்கிறார்கள்.
மதுக்கடையில் புகுந்தது
இந்த நிலையில் இந்த உயிரினம் நேற்று நியூயார்க் நகரில் இருக்கும் முக்கியமான மதுக்கடை ஒன்றில் புகுந்துள்ளது. மதுக்கடை மூடப்பட்ட பின் திருட்டுத்தனமாக அது கடைக்குள் புகுந்துள்ளது. மேலும் உள்ளே புகுந்து ஒரு முழு பாட்டில் மதுவை குடித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே இந்த உயிரினம் மது குடித்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.
|
வைரல் ஆன உயிரினம்
தற்போது இந்த சம்பவம் காரணமாக அந்த உயிரினம் வைரல் ஆகி இருக்கிறது. இதுகுறித்து இவர் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார் ''மதுகுடித்த பின்பும் அது உயிரோடு இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனாலும் அந்த உயிரினம் எப்படி பாட்டிலை திறந்து இருக்கும்'' என்று தனது சந்தேகத்தை கேட்டு இருக்கிறார்.
|
அரசியல்தான் காரணம்
தற்போது அந்த உயிரினம் மது குடித்ததற்கு இவர் வித்தியாசமான காரணம் கூறியிருக்கிறார். அதில் ''இங்கு நடக்கும் அரசியல் பிரச்சனை தாங்காமல் அந்த உயிரினம் மது குடித்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.