ஆஹா, இப்படியும் ஒரு நாடா? அதிக நேரம் வேலை பார்த்ததால் வேலை பறிக்கப்பட்ட ஊழியர்.. கோர்ட்டில் கேஸ்
காட்டலோனிய தலைநகர் பார்சிலோனாவில் ஒரு நபர் மிகவும் அதிகமாக வேலை பார்த்த காரணத்தால் வேலையில் இருந்து தூக்கப்பட்டு இருக்கிறார்.
பார்சிலோனா: புதிதாக உருவாகி இருக்கும் காட்டலோனியா நாட்டின் தலைநகர் பார்சிலோனாவில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அங்கு ஒரு பல் பொருள் அங்காடியில் வேலை பார்த்த நபர் மிகவும் அதிகமாக வேலை பார்த்த காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
10 மணிக்கு ஆரம்பிக்கும் வேலைக்கு 8 மணிக்கே வந்து இவர் மிகவும் நேர்மையாக பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் எல்லோரும் சென்ற பின் கடைசியாக இவர் பணி முடித்து திரும்பி இருக்கிறார். 12 வருடமாக இப்படி கஷ்டப்பட்டு வேலை பார்த்த இவர் தற்போது பணியை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து தற்போது இவர் தனது 'முன்னாள் பாஸ்' மீது வழக்கு தொடுத்து இருக்கிறார். இந்த வழக்கு தற்போது பார்சிலோனா நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

பார்சிலோனாவில் நேர்மையின் சிகரம்
புதிதாக உருவாக்கி இருக்கும் காட்டலோனியா நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள பெரிய பல் பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வந்தார் ஜேன். மிகவும் நேர்மையான நபரான இவர் காலையில் 10 மணிக்கு திறக்கும் கடைக்கு 8 மணிக்கே வந்து அனைத்து பொருள்களையும் சுத்தம் செய்து இருக்கிறார். அதேபோல் மாலையில் அதிகமாக வேலை செய்துவிட்டு கடைசியாக வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். இதைபோல் இவர் கடந்த 12 வருடங்களாக வேலை செய்து இருக்கிறார்.

பணியில் இருந்து தூக்கப்பட்டார்
இந்த நிலையில் அதிகமாக இவர் வேலை செய்வதை பார்த்த இவரது நிறுவனத்தின் தலைவர் இவரை வேலையை விட்டு நீக்கி இருக்கிறார். மேலும் 12 ஆண்டுகள் வேலை பார்த்ததற்கு எந்த விதமான சன்மானமும் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இவர் பணியை விட்டு நீக்கப்பட்டது அங்கு வேலை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பார்சிலோனாவில் வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் அவரது நிறுவன தலைவரின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத ஜேன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் "நான் மிகவும் கடினமாக வேலை செய்கிறேன் என்பதால் என்னை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள். இனி நான் என்ன வேலை பார்ப்பேன் என்று தெரியவில்லை. எனக்கு வரவேண்டிய பணமும் சரியாக வரவில்லை'' என்றும் புலம்பி இருக்கிறார்.

வேறு காரணம் சொன்ன நிறுவனம்
இந்த நிலையில் இவரை வேலையை விட்டு தூக்கியதற்கு அந்த நிறுவனம் வேறு காரணத்தை கூறியிருக்கிறது. அதில் ''இவர் அலுவலகத்தின் விதிமுறைகளை மீறிவிட்டார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தை விட மிக அதிகமாக வேலை பார்த்து இருக்கிறார். அது அலுவலகத்தில் பலருக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது'' என்று காரணம் கூறியிருக்கிறார்கள். இந்த விதிமுறை தனக்கு தெரியாது என ஜேன் தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications