அபாயகரமான தாய் குகை.. உயிரைப் பணயம் வைத்த மீட்புப் பணி.. திரில் தகவல்கள்!
அபாயகரமான தாய் குகையில் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு பணியினர்.
Recommended Video

பாங்காங்: மிகவும் குறுகலான குகை பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை உயிரை பணயம் வைத்து மீட்பு பணியினர் மீட்டனர்.
தாய்லாந்தில் உள்ள தாம் லுயாங் என்ற குகைக்கு பிறந்த நாள் கொண்டாட 12 கால்பந்து வீரர்களும், 1 பயிற்சியாளரும் கடந்த ஜூன் 23-ஆம் தேதி சென்றனர். அப்போது கனமழை பெய்ததால் அவர்கள் இருந்த குகையை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த வெள்ளநீரில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் இதற்காக வீரர்கள் எத்தனை குறுகலான பாறை இடுக்குகளில் சிரமப்பட்டு சென்றுள்ளனர் என்பதை மீட்புப் படையினர் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தாய்லாந்து சமீப காலமாக பல்வேறு அரசியல் குழப்பங்களில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்த சிறார்கள் மீ்ட்பில் ஒட்டுமொத்த நாடும் ஓரணியில் திரண்டது.
மீட்புப் பணி நினைத்தது போல சாதாரணமாக இல்லை. மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஒவ்வொரு சிறுவரையும் மிகுந்த கவனத்துடன் மீட்டுக் கொண்டு வந்தனர். ஒவ்வொருவருக்கும் முகமூடி, நீச்சல் உடை, பூட்ஸ், ஹெல்மட் அணிவித்து மெதுவாக அழைத்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு பையனுக்கும் 2 கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் உடன் வந்துள்ளனர். ஒருவர் முன்னே செல்வார், இன்னொருவர் பையனின் பின்புறம் செல்வார். அந்தப் பையனுக்குரிய சுவாச சிலிண்டரை முன்னே செல்பவர் தூக்கிச் சென்றுள்ளார்.
8 மில்லிமீட்டர் அடர்த்தியான கயிறைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு சிறுவனையும் அழைத்து வந்துள்ளனர். மீட்புப் படையினரின் பணிகள் அசாத்தியமானவை மட்டுமல்லாமல் மிகவும் திரில்லானவை. சமீபத்தில் உலகில் எங்குமே இப்படி ஒரு மீட்புப் பணி நடந்ததில்லை என்பதால் மிகுந்த கவனம் பெற்று விட்டது.












Click it and Unblock the Notifications