‘பாரத ரத்னா’ கலாம் மறைவு: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்
குவைத்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவிற்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா' ஆலி ஜனாப் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று மாலை மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) மாணவர்களிடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம் அவர்கள், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். அன்னாருக்கு வயது 83.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், மாணவ செல்வங்கள் மற்றும் இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை (31.07.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications