பாகிஸ்தானில் 10 வருடங்களில் கருக்கலைப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பு!
இஸ்லாமாபாத்: செக்ஸ் பற்றி கூட டிவியில் பேச அனுமதிக்காத, கட்டுப்பாடுகள் நிறைந்த பாகிஸ்தானில் கருக்கலைப்பு அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் கருக்கலைப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரம் பாகிஸ்தானை அதிர செய்துள்ளது.
மக்கள்தொகை கவுன்சில், குட்மாசெர் இன்ஸ்ட்டிடியூட்டுடன் இணைந்து நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்கள்:

2012ம் ஆண்டில், 15 வயதில் இருந்து 49 வயதுக்குட்பட்ட பெண்களில் ஆயிரத்துக்கு 50பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். 2002ல் இது 27 ஆகதான் இருந்தது. ஒட்டுமொத்த கருக்கலைப்பு எண்ணிக்கை 2012ல், 2.25 மில்லியனாக இருந்துள்ளது. பாகிஸ்தானில் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடமில்லை என்றபோதிலும், ரகசியமாக இத்தனை கருக்கலைப்புகள் நடந்துள்ளன.
இதில் பெரும்பாலான கருக்கலைப்புகள், படிப்பு தகுதியில்லாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலம் காலமாக செய்யப்பட்டுவரும் நடைமுறையில் இந்த கருக்கலைப்புகள் இருந்துள்ளன. இதுபோன்ற கருக்கலைப்புகளால் 6 லட்சத்து 23 ஆயிரம் பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆய்வின்போது பல்வேறு மருத்துவமனைகள் மற்றும், கருக்கலைப்பு செய்யும், 44 பெண்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூகுள் வெளியிட்ட அறிக்கையில், செக்ஸ் தொடர்பாக இணையத்தில் அதிகம் தேடிய நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications