டாக்டர் சவிதா மரணம் எதிரொலி... 6 ஆண்டுகளுக்குப் பின் மாறும் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம்!
கருக்கலைப்புக்கு ஆதரவாக பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதை அமைதிப் புரட்சி என அயர்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
டப்ளின்: கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் எட்டாவது சட்டதிருத்தத்தை ஆதரித்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதை அமைதி புரட்சி என அயர்லாந்து நாட்டின் பிரதமர் லியோ வர்ட்க்கர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அங்கு கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இதனால், கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா, உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாததால் பரிதாபமாக உயிரிழந்தார். இது அயர்லாந்தில் மட்டுமின்றி, இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அரசின் முடிவு:
சவிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக அனைத்து மக்களின் கருத்தையும் அறிய அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.

வாக்குகள் பதிவு:
அதன்படி, நேற்று இது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 6500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

எதிர்பார்ப்பு:
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாகக் கூறுகின்றன. அயர்லாந்து தேசிய தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கருக்கலைப்புக்கு ஆதரவாக 69.4 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஐரிஷ் டைம்ஸ் வாக்கெடுப்பில் 68 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்திற்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பெருமிதம்:
இந்நிலையில் இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் லியோ வர்ட்க்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் எட்டாவது சட்டதிருத்தத்தை ஆதரித்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளது அமைதி புரட்சி. மக்கள் தங்களது உணர்வுகளை வாக்குகளின் வழியாக பிரதிபலித்துள்ளனர். அந்த முடிவுகள் அபாரமானவை' எனத் தெரிவித்துள்ளார். லியோ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications