ஓமனில் கடும் கட்டுப்பாடு.... ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்
Recommended Video
மஸ்கட்: ஒரு வருடத்தில் மட்டும் 65 ஆயிரம் வெளிநாட்டவர்கள் ஓமனை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. சர்வதேச நீதிமன்ற நீதிபதியின் பரபரப்பு தீர்ப்பு
ஓமனியமயமாக்கல் தொடர்பான கொள்கைகளால், மே 2018 முதல் மே 2019 வரை 65,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஓமனை விட்டு வெளியேறியுள்ளனர். தேசிய புள்ளி விவர மற்றும் தகவல் மையத்தின் (என்.சி.எஸ்.ஐ) தரவுகளின்படி, ஓமனில் வசிக்கும் மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2018 மே முதல் 2019 மே வரை 65,397 குறைந்து வெறும் 2,017,432 ஆக உள்ளது.

அதே காலகட்டத்தில், ஓமனியர்களின் எண்ணிக்கை 2,575,132 யிலிருந்து 2,649,857 ஆக உயர்ந்துள்ளது. இது உள்ளூர்வாசிகளின் மக்கள் தொகை அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது.
புதிய கொள்கைகளின், தொடக்க ஆறு மாதங்களில் வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்கான விசாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், வெளிநாட்டினர் வெளியேறுவது அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, 2019 ஜனவரி முதல் மே வரை 27,000 ஓமனியர்கள் தனியார் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த பன்னிரண்டு மாதங்களில் ஓமனில் இருந்து பல வெளிநாட்டவர்கள் வெளியேறி விட்டதால், வீட்டு வாடகைகள் தரைமட்டத்திற்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஓமன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஹசன் அல் ருகீஷி கூறுகையில்: மஸ்கட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கும் இடத்திற்கான தேவை குறைந்து விட்டது. இதனால், வீடு, மற்றும் ஹோட்டல் அறைகளின் வாடகை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சி, அல் மாபெலா மற்றும் அல் அமரத் போன்ற இடங்களில் 60 சதவீதமும், மவேலாவில் 40 சதவீதமும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications