"நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா".. ஓனருக்காக ஆஸ்பத்திரி வாசலில் பல நாள் காத்திருக்கும் நாய்..!

பாசக்கார நாய், தன் எஜமானருக்காக மருத்துவமனை வாசலில் காத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

இஸ்தான்புல்: ஓனருக்கு திடீரென உடம்பு சரியில்லை.. இதனால் அந்த வீட்டுநாய் துடிதுடித்து போய்விட்டது.. இதையடுத்து, அந்த வளர்ப்பு நாய் செய்த சம்பவம்தான் இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சிமல் சென்டர்க் என்ற பெண்மணி வசித்து வருகிறார்.. இவர் ரெட்ரீவர் வகையினை சேர்ந்த ஒரு நாயை ஆசை ஆசையாக வளர்த்தும் வருகிறார்.

 Affection dog waits outside a hospital for her owner Turkey

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த 14-ம்தேதி அந்தம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விடவும், ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது.

ஆம்புலன்ஸில் சிமல் சென்டர்க்கை ஏற்றுவதை பார்த்த அந்த வளர்ப்பு நாய் இங்குமங்கும் சுற்றி சுற்றி வந்தது.. பிறகு, அந்த பாசக்கார நாய், ஓனருக்கு என்ன ஆச்சோ என்று பதைபதைத்து போய், பல கிலோமீட்டருக்கு ஆம்புலன்ஸ் பின்னாடியே ஆஸ்பத்திரி வரை ஓடி வந்தது.

 Affection dog waits outside a hospital for her owner Turkey

ஆம்புலன்ஸில் இருந்து அவரை இறக்கி சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.. இப்போதும் அவர் எப்போது வீட்டுக்கு வருவார் என்று நாய் காத்திருக்கிறது.. ஒவ்வொரு நாள் காலையிலும் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துவிடுகிறது.. வாசலிலேயே சிமல் சென்டர்க்கின் வருகைக்காக காத்திருக்கிறது.. அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதை விரட்டினாலும் அதனை அந்த நாய் கண்டுகொள்வதே கிடையாது..

ஒருமுறை அந்த நாயை கொண்டு செல்ல சென்டர்க்கின் மகள் முயற்சி செய்தார்.. அப்போதும் மறுபடியும் மறுபடியும் ஆஸ்பத்திரிக்கே வந்து வாசலில் நின்று கொள்கிறது. ஆம்புல்ன்ஸ் பின்னாடியே ஓடிவரும் இந்த நாய் வாசலில் காத்திருக்கும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+