வெடிகுண்டு தாக்குதலில் நூலிழையில் தப்பிய ஆப்கன் வேட்பாளர்: பாதுகாவலர்கள் காயம்
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா மீது இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அப்துல்லா அப்துல்லா எனும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று காபூலில் பிரச்சாரம் செய்து விட்டு மற்றொரு பொதுக்கூட்டத்திற்காக புறப்பட்டார் அப்துல்லா. அப்போது அவரது கார் பயணம் செய்த சாலையில் பதித்து வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் திடீரென வெடித்தன.
அதிர்ஷ்டவசமாக அப்துல்லா அப்துல்லாவின் கார் சில நொடிகள் முன்னதாக அப்பகுதியை கடந்து விட்டது. இதனால் அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். எனினும், அவரது வாகன அணிவகுப்பில் வந்த மற்ற சில கார்கள் தூக்கி வீசப்பட்டு, தீப்பற்றி எரிந்ததாகவும், அவரது மெய்க்காப்பாளர்களில் சிலர் காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications