விராட் கோலி "இப்படி" செய்திருக்க கூடாது.. தாலிபான் தலைவர் சொன்ன வார்த்தை! உற்று பார்க்கும் ரசிகர்கள்
காபூல்: நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்கள் பிறப்பிக்கும் பல்வேறு உத்தரவுகள் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் விராட் கோலிக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கிரிக்கெட்டிற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவரான அனாஸ் ஹக்கானி என்பவர் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு திடீர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தாலிபான் தலைவர்
தீவிர கிரிக்கெட் ரசிகரான அனாஸ் ஹக்கானி, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவுகள் குறித்து சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். கோலியும் ரோஹித்தும் மே 2025ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குச் சற்று முன்னதாக ஓய்வு அறிவிப்பு வெளியானது. இது குறித்தே அனாஸ் கருத்து கூறியிருக்கிறார்
விராட் கோலியின் ஓய்வு முடிவு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகத் தெரிவித்த ஹக்கானி, அதை அவர் வாபஸ் பெற வேண்டும் என கூறியுள்ளார். மேலும், விராட் கோலி தனது 50 வயதைத் தொடும் வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் அதுவே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கோரிக்கை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ரோஹித்தின் டெஸ்ட் ஓய்வு நியாயமானது தான். ஆனால் கோலியின் ஓய்வுக்குப் பின்னால் உள்ள காரணம் எனக்குப் புரியவில்லை. உலகில் கோலி போன்ற தனித்துவமானவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள். அவர் 50 வயது வரை விளையாட முயல வேண்டும் என்பதே என் ஆசை.
ஒருவேளை இந்திய ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களால் கோலி விரக்தியடைந்திருக்கலாம். ஆனால், அவருக்கு இன்னும் நேரம் இருந்தது. சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன்களை ஜோ ரூட் எப்படித் துரத்துகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதுபோல விராட் கோலியும் விளையாட வேண்டும்" என்றும் ஹக்கானி குறிப்பிட்டார்.
விராட் கோலி
36 வயதான கோலி, கடந்த மே 12ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 10,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட 770 ரன்கள் மட்டுமே இருந்தது.. 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கோலி எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. கோலியின் ஓய்வுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக தான் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இரு நட்சத்திர வீரர்களின் ஓய்வைத் தொடர்ந்து 25 வயதான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. மூத்த வீரர்கள் பெரியளவில் இல்லாததால் கில் மீது இங்கிலாந்து தொடரில் அழுத்தம் இருந்தது. ஆனால், அதையும் தாண்டி சிறப்பாகச் செயல்பட்ட அவர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற சமன் செய்தார்.
அடுத்து என்ன
கோலியும் ரோஹித்தும் ஏற்கனவே டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இருவரும் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தற்போது ஆசிய கோப்பை நடந்து வரும் சூழலில், அதைத் தொடர்ந்து அக்டோபரில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. அதில் இருவரும் மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications