தீயில் சிக்கிக் கருகிய கப்பல் “நார்மன் அட்லாண்டிக்” – மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்கள்!
ஏதென்ஸ்: நார்மன் அட்லாண்டிக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து பயணிகளைக் காப்பாற்றும் பணியில் இத்தாலி மற்றும் கீரிஸ் நாட்டு ஹெலிகாப்டர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கிரீஸ் நாட்டு துறைமுகமான பட்ராசிலிருந்து 478 பேருடன் புறப்பட்ட "நார்மன் அட்லாண்டிக்" பயணிகள் கப்பலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
பட்ராஸ் துறைமுகத்திலிருந்து காலை 5:30 மணியளவில் 411 பயணிகள் மற்றும் 55 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இத்தாலி நாட்டில் உள்ள அன்கோனா துறைமுகத்துக்கு "நார்மன் அட்லாண்டிக்" கப்பல் சென்றுகொண்டிருந்த போது அதன் பார்க்கிங் பகுதி முதலில் தீப்பிடித்துள்ளது.

இவ்விபத்து ஏற்பட்ட போது கப்பலானது கிரீஸ் தீவுப்பகுதியான ஒத்தோனோய் அருகே சென்றுகொண்டிருந்தது. உடனடியாக இது குறித்து எச்சரிக்கை விடுத்த கப்பலின் கேப்டன் பயணிகள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு கப்பல்கள், மற்றும் இத்தாலி மற்றும் கிரேக்க நாட்டு விமானங்கள் விரைந்துள்ளன. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 200 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அக்கப்பலில் பயணம் செய்த மேகா என்ற பயணி பதட்டத்துடன் கூறுகையில், கப்பலில் வரவேற்பறையில் நாங்கள் இருக்கும் நிலையில் எங்கள் காலில் உள்ள ஷூ தகிக்கிறது, எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
கப்பல் உள்ள பகுதியில் வானிலை மோசமாக உள்ளதால் மீட்பு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் 411 பயணிகளும், 55 கப்பல் ஊழியர்களும் உள்ளனர். மேலும் 222 வாகனங்களும் கப்பலில் இருந்தன. தீ விபத்து குறித்து கிரீஸ் டிவிக்கு பயணிகள் மொபைல்போனில் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிரீஸ் அரசு, பயணிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது. தீ மேலும் பரவியதால் பயணிகளை அவசர படகுகள் மூலம் வெளியேற்ற கப்பல் மாலுமி உத்தரவிட்டார். பயணிகள் அணிய உயிர் காக்கும் ஆடையும் வழங்கப்பட்டது.
இறுதி தகவலின்படி 300 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சரக்கு கப்பல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இவ்விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எஞ்சியவர்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications