துணை விமானியின் மன அழுத்தம் பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியும்: லுப்தான்ஸா
டுசல்டார்ப்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி லுபிட்ஸுக்கு மன அழுத்த பிரச்சனை இருந்தது தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என லுப்தான்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
லுப்தான்ஸா நிறுவனத்தின் கிளையான ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் துணை விமானியாக பணிபுரிந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28). அவர் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் அவர் உள்பட விமானத்தில் இருந்த 150 பேர் பலியாகினர்.
லுபிட்ஸ் மன அழுதத்தால் அவதிப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து லுப்தான்ஸா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மன அழுத்தம்
லுபிட்ஸ் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்ததும் எங்களுக்கு தெரியும். விமானி பயிற்சி படிப்பு படிக்கையில் அவர் பல மாதங்கள் விடுப்பில் சென்றுவிட்டு மீண்டும் வந்தார். அப்போது தான் அவர் தனது நிலைமை குறித்து இமெயில் மூலம் விளக்கம் அளித்திருந்தார் என்று லுப்தான்ஸா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி
மன ரீதியான பிரச்சனைகள் இருந்த லுபிட்ஸை ஏன் மீண்டும் பயிற்சியில் சேர்த்து அவரை விமானத்தை இயக்க லுப்தான்ஸா அனுமதித்தது என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்கொலை
லுபிட்ஸுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனைக்காக அவர் சிகிச்சை பெற்றுள்ளார் என ஜெர்மனி சட்ட பிரதிநிதி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால் லுபிட்ஸுக்கு அந்த பிரச்சனை எப்பொழுது ஏற்பட்டது, எந்த வகையான சிகிச்சை பெற்றார் என்பதை தெரிவிக்கவில்லை.

லுப்தான்ஸா
லுபிட்ஸுக்கு விமானத்தை இயக்கும் தகுதி இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அவர் மறைத்துவிட்டார். இந்நிலையில் லுபிட்ஸ் விமானத்தை இயக்க 100 சதவீதம் தகுதியானவர் என்று ஜெர்மன்விங்ஸ் தெரிவித்ததாக முன்னாள் விமானி கார்ஸ்டன் ஸ்போஹ்ர் தெரிவித்துள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications