இனி விமானி அறையில் 2 பேர் கட்டாயம் இருக்கணும்: வருகிறது புதிய விதி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விபத்தை அடுத்து பல விமான நிறுவனங்கள் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்துகின்றன.
லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் ஏர்பஸ் ரக விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விசாரணையில் விமானத்தை துணை விமானி லுபிட்ஸ் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கியது தெரிய வந்துள்ளது.

விமானி அறையில் இருந்து கேப்டன் வெளியே சென்ற நேரத்தில் அந்த அறையின் கதவை பூட்டிக் கொண்டுள்ளார் லுபிட்ஸ். அறையில் தனியாக இருந்த அவர் விமானத்தை மலை மீது மோத வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் லுபிட்ஸ் உள்பட விமானத்தில் இருந்த 150 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தை அடுத்து உலக விமான நிறுவனங்கள் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்துகின்றன. அதாவது விமானி அறையில் எப்பொழுதும் இரண்டு பேர் இருக்க வேண்டும். கேப்டனோ, துணை விமானியோ விமானி அறையில் இருந்து வெளியே சென்றால் அவர்களை தனியாக இருக்க விடாமல் துணைக்கு சிப்பந்தி ஒருவர் இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் விமானிகள் தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதை தவிர்க்கலாம் என்று விமான நிறுவனங்கள் கருதுகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications