ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அல்கொய்தாவை களமிறக்குகிறது யு.எஸ்?
சிரியா: ஈராக்கில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய அரசை அமைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் யுத்தத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பெர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக தலிபான்கள், அல் கொய்தா போன்ற இயக்கத்தினரை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சிரியாவில் ஹாஸ்ம் தீவிரவாத இயக்கத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்த இயக்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால்தான் அமெரிக்கா தற்போது வேறு யுத்திகளைக் கடைபிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலையைத்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் எதிர்கொள்ள நேரிட்டது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கியது அல் கொரசான் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு. இதுதான் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் குடைச்சலான தலிபான் அமைப்பு.
அதேநேரத்தில் முல்லா ஒமர் தலைமையிலான தலிபான் அமைப்பு 'ரொம்பவும் நல்ல' தலிபான்கள் என்று பாராட்டு பத்திரம் வாசித்தது அமெரிக்காவும் பாகிஸ்தானும். இதனாலேயே தெஹ்ரிக் இ தலிபான்களுக்கு எதிராக முல்லா ஒமர் தலைமையிலான தலிபானை களமிறக்குவது குறித்து பரிசீலித்தது அமெரிக்கா.
தற்போது சிரியாவில் அல்கொய்தாவின் முகமாக செயல்படுகிற அமைப்புதான் ஜபத் அல் நுஸ்ரா. அமெரிக்கா அல்கொய்தாவுக்கு தடை விதித்திருக்கிறது. ஆனால் அதன் மற்றொரு முகமான ஜபத் அல் நுஸ்ராவுக்கு தடை விதித்துவிடவில்லை. புதிதாக ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக ஜபத் அல் நுஸ்ராவை பயன்படுத்துவது குறித்துதான் அமெரிக்கா பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.
இருந்த போதும் ஜபத் அல் நுஸ்ரா அவ்வளவு எளிதாக அமெரிக்காவை நம்பிவிடாதுதான்.. ஏனெனில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களில் அந்த இயக்கத்தின் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இருந்த போதும் அமெரிக்காவோ, தவறுதலாக அது நிகழ்ந்துவிட்டது என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
அனேகமாக அமெரிக்காவின் முகமாக ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இனி ஜபத் அல் நுஸ்ராதான் களமிறங்கும் என்றே தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications