கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றும் காமக்கொடூரன்கள்: துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
நியூயார்க்: கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளிகள் என்று கூறி நான்கு பேரின் பெயர்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பிரசுரங்களை மாணவர்கள் தான் வினியோக்கித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

காமக்கொடூரன்கள்
அந்த பிரசுரத்தில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரயரின் பெயரை குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருபவர்கள். அதனால் பெண்களே இவர்களிடம் உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்
கொலம்பியா பல்கலைக்கழகம் பாலியல் பலாத்காரம் நடப்பதை தடுக்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தவறிவிட்டதாக 23 மாணவர்கள் இந்த மாத துவக்கித்தில் புகார் அளித்தனர். ஆனால் பல்கலைக்கழகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

பாத்ரூம்
துண்டு பிரசுரங்கள் தவிர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நான்கு கட்டிடங்களில் இருக்கும் கழிவறைகளிலும் அந்த 4 பேரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகம்
பாலியல் குற்றங்கள் செய்து வரும் அந்த 4 பேரையும் பல்கலைக்கழகம் பாதுகாப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications