உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்
ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளி தாக்குதல் தீவிரவாதிகள் நடத்தலாம் அமெரிக்க எச்சரிக்கை
ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. உலக நாடுகளில் இருந்தெல்லாம் கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண குவிந்து வருகின்றனர். இந்த போட்டி அடுத்த ஜூலை 15 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், அங்கே விளையாட்டு அரங்கங்கள், ரசிகர்கள் கூட்டமாக ஒன்றுகூடும் பகுதிகள், சுற்றுலா இடங்கள், ரயில், விமான நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம். உலகக் கோப்பை போன்ற சர்வதேச நிகழ்ச்சிகள் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்துவதற்கான எளிதான இலக்குகளாக உள்ளன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை தகவலைத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் கால்பந்து போட்டி நடக்கும் மைதானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள் அந்த தகவலில், தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications