டீன் ஏஜ் மகளை 4 ஆண்டுகளாக பலாத்காரம்... அமெரிக்க தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது மகளை நான்கு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரஸ்னோ என்ற இடத்தில் வசித்து வந்த தந்தை ஒருவர், தனது டீன் ஏஜ் மகளை 4 வருடங்கள் பலாத்காரம் செய்து வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதுவரை இவ்வளவு ஆண்டுகள் சிறை தண்டனை யாருக்கும் விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 மே மாதம் முதல் 2013ம் ஆண்டு வரை அந்நபர் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, குற்றவாளியின் பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பிற்கு முன், "இவன் சமூகத்திற்கு மிகவும் அபாயமானவன். இவனை வெளியே விட்டால் பலரை இவனை போல மாற்றிவிடுவான்" எனக் கூறி, 1,503 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.