இந்தியர்களின் கருப்புப் பணம் குவிந்துள்ள ஜெனீவா எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிரடி ரெய்டு!
ஜெனீவா: ஜெனீவா நகரில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் மோசடி செய்து ஏமாற்ற வங்கி நிர்வாகம் உதவியதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இங்குள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலர் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிலும் இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டது எச்எஸ்பிசி. இதன் ஜெனீவா கிளைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இந்தியர்களின் கருப்புப் பணமும் பெருமளவில் இங்கு புதைந்துள்ளது.
இதுகுறித்து ஜெனீவா அரசு வழக்கறிஞர் கூறுகையில், பண மோசடி தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே சோதனை நடத்தப்பட்டது. வங்கிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் கூட பல்வேறு தனி நபர்களும் கூட விசாரிக்கப்படுவார்கள். எச்எஸ்பிசி வங்கியின் சுவிட்சர்லாந்து தலைமையகத்திலும், சில கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது என்றார் அவர்.
இந்த வங்கியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் மோசடி செய்வதற்கு வங்கி நிர்வாகமே உதவியதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதன் மூலம் ஸ்விஸ் அரசுக்கு 119 பில்லியன் டாலல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி மீது வழக்குத் தொடரப்பட்டது.
ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் இந்தியர்கள் பலர் கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளனர். இவர்கள் குறித்த பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக இந்திய அரசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியே மோசடிப் புகாரில் சிக்கி விசாரணைக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications