இந்தியர்களின் கருப்புப் பணம் குவிந்துள்ள ஜெனீவா எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிரடி ரெய்டு!
ஜெனீவா: ஜெனீவா நகரில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் மோசடி செய்து ஏமாற்ற வங்கி நிர்வாகம் உதவியதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இங்குள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலர் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிலும் இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டது எச்எஸ்பிசி. இதன் ஜெனீவா கிளைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இந்தியர்களின் கருப்புப் பணமும் பெருமளவில் இங்கு புதைந்துள்ளது.
இதுகுறித்து ஜெனீவா அரசு வழக்கறிஞர் கூறுகையில், பண மோசடி தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே சோதனை நடத்தப்பட்டது. வங்கிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் கூட பல்வேறு தனி நபர்களும் கூட விசாரிக்கப்படுவார்கள். எச்எஸ்பிசி வங்கியின் சுவிட்சர்லாந்து தலைமையகத்திலும், சில கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது என்றார் அவர்.
இந்த வங்கியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் மோசடி செய்வதற்கு வங்கி நிர்வாகமே உதவியதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதன் மூலம் ஸ்விஸ் அரசுக்கு 119 பில்லியன் டாலல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி மீது வழக்குத் தொடரப்பட்டது.
ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் இந்தியர்கள் பலர் கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளனர். இவர்கள் குறித்த பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக இந்திய அரசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியே மோசடிப் புகாரில் சிக்கி விசாரணைக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications