Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணுகுண்டுக்கு எதிர்ப்பு.. ஏடாகூடமாக மிரட்டும் டிரம்ப்.. அமெரிக்கா - ஈரான் இன்று 2வது பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகால பிரச்சனை உள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை அமெரிக்கா விரும்பவில்லை. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறும்.

donald trumph iran usa

அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளை எடுத்து கொண்டால் இஸ்ரேலிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளது. இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. இப்போது ஈரானும் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாகும் என்பது மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சக்திவாய்ந்த நாடாக மாறும்.

இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது சரியலாம். இதனால் எப்படியாவது ஈரானை அணுஆயுதம் தயாரிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பது தான் டிரம்பின் முதல் நோக்கமாக உள்ளது. இதனால் அணுசக்தி திட்டம் மூலம் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு, டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

முதலில் அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்தது. அதன்பிறகு ஓமனில் வைத்து அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்பது நடைபெற்றது. கடந்த 12ம் தேதி இந்த பேச்சுவார்த்தை நடந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் மற்றும் ஈரான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இருப்பினும் பேச்சவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இருநாடுகளும் தெரிவித்தன.

இதையடுத்து அடுத்தக்கட்டமாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் ஈரான் வெளியறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் உள்பட பிற பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன், ஈரான் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று டொனால்ட் டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரான் சிறந்த நாடாக மாற வாய்ப்புள்ளது. பலிகள் ஏற்படாமல் அந்த நாடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் எனது முதல் திட்டம். அதேவேளையில் எனது 2வது திட்டத்தை கையில் எடுக்க வைத்தால் அது ஈரானுக்கு மிகவும் மோசமாக அமையும்'' என்று கூறியுள்ளார்.

அதாவது ஈரான் பேச்சுவார்த்தை மூலம் அணுசக்தி திட்டத்தின்படி அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது நடந்தால் ஈரான் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை, குண்டு வீச்சை கையில் எடுப்பேன் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+