இந்தோனேசியாவில் இடைவிடாமல் உலுக்கும் அதிசக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.2 ஆக பதிவு!
ஜகார்தா: இந்தோனேசியாவில் அடுத்தடுத்து மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு பெரும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது.

2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடலுக்கு அடியே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்தான் தெற்காசியாவையே பேரழிவுக்குள்ளாக்கியது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடலுக்குள் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கம் (ரிக்டரில் 9.3) மிக பயங்கரமான சுனாமி பேரலைகளை உருவாக்கியது. இந்தோனேசியா தொடங்கி இந்தியா வரை தெற்காசிய நாடுகளை மிகப் பெரும் பேரழிவுக்குள்ளாக்கியது இந்த 2004 சுனாமி. இந்த சுனாமி பேரழிவால் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் நிலைமையே என்ன என தெரியாமல் கடலோடு கடலாக கரைந்து போயினர்.
இதனாலேயே இந்தோனேசியா நிலநடுக்கம் என்பது தெற்காசியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்குகிறது. இந்தோனேசியா தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்க அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணம் டூயல் கடற்கரை நகரில் ரிக்டரில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரிக்டரில் 7.0 அலகாக மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 3-வதாக ரிக்டரில் 5.1 அலகு ரிக்டரும் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இன்று பண்டா கடற்பரப்பில் மற்றொரு அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 அலகுகளாக பதிவாகி இருந்தது. ஆனால் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாம் எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications