காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிட்டது அர்ஜென்டினா
44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது.
"தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை" என கடற்படையின் பிரதிநிதியான என்ரீகே பால்பி கூறினார்.
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலான ஆரா சன் குவான், கடைசியாக நவம்பர் 15 ஆம் தேதியன்று தொடர்பில் இருந்தது.
கடைசியாக கப்பல் இருந்த இடத்தின் அருகே வெடிப்பு நடந்திருக்கக்கூடும் என எழுந்த சந்தேகத்தையடுத்து, அதில் உள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை குறைந்தது.
தேடும் பணியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது ஏன்?
குழுவினரை உயிருடன் மீட்கும் சாத்தியக்கூறுகள் இல்லாததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கேப்டன் பால்பி தெரிவித்தார்.
குழவினரின் விதி என்ன என்று தெரியவில்லை என்றும் அதோடு, "நீர்மூழ்கி காணாமல் போன பகுதிகளில், விபத்துக்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றும் அவர் கூறினார்.
தற்போது "சூழ்நிலை மாறிவிட்டதாக" தெரிவித்த பால்பி, ஆரா சன் குவான் காணாமல் போனது என்று கருதப்படும் பகுதியில், கடலுக்கடியில் கப்பலின் சிதைவு ஏதாவது உள்ளதா என்பதை பல கப்பல்களும், மற்ற சில நீர்மூழ்கி கப்பல்களும் தீவிரமாக தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன ஆனது?
காணாமல் போன் ஆரா சன் குவான், தென் அமெரிக்காவின் தெற்கு முனை பகுதிக்கு அருகில் ஊஸ்வாயாவில் வழக்கமான சேவையில் இருந்து, அதனுடைய தளமான பர்னஸ் அயர்ஸின் தெற்கிலுள்ள மார் டெல் பிலாடாவுக்கு டீசல்-மின்சார சக்தியால் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் திரும்பி வந்து கொண்டிருந்தது.
கடலில் 430 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் சன் குவான் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது.
கப்பலில் இருந்தவர்கள் யார் யார்?
பெட்ரோ மார்டீன் ஃபெர்னான்டஸ் தலைமையில் 44 பேரைக் கொண்ட குழுவினர் நீர்மூழ்கி கப்பலில் இருந்தனர்.
அதில் 43 ஆண்கள் மற்றும் ஒரே ஒரு பெண். 35 வயதான, எலீனா மாரீ க்ராஃப்சிக் அர்ஜென்டினாவில் நீர்மூழ்கிக் கப்பலில் சேவை செய்த முதல் பெண் அதிகாரி ஆவார்.
கப்பல் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் மௌரீசியோ மார்க்ரி உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்த முன்னாள் ராணுவத் தளபதி மரணம்
- சினிமா விமர்சனம்: திருட்டுப் பயலே-2
- கமல், ரஜினி, சீமான், ஸ்டாலின் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்?
- இலங்கை கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு)
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்
















Click it and Unblock the Notifications