பெல்ஜியத்திலும் பதற்றம்.. அடுக்குமாடி குடியிருப்பில் ஆயுதங்களுடன் நுழைந்த 4 பேரால் பரபரப்பு!
கென்ட்: பெல்ஜியம் நாட்டின் ஹென்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயுதங்களுடன் நுழைந்த 4 பேரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஹோட்டல் ஒன்றை கைப்பற்றி 50க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இந்த பதற்றம் அடங்குவதற்குல் பெல்ஜியம் நாட்டில் ஆயுதமேந்திய நபர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு பெல்ஜியத்தின் ஹென்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கியுடன் சிலர் நுழைந்து அங்கிருந்த சிலரை பிணையக் கைதிகளாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆயுததாரிகளும் தீவிரவாதிகளா? அல்லது கொள்ளையர்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.