Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவால் மீண்டும் ஆபத்து? கொரோனாவின் புதிய வேரியண்ட்கள் வெளிப்படலாம்.. மருத்துவ நிபுணர்கள் அச்சம்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் ஒமிக்ரானின் புதிய வகை கொரோனாவான பிஎப் 7 வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் புதிய வேரியண்ட்கள் வெளிப்படலாம் என்றும் அவை கொடிய வைரசாக இருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஒமிக்ரான் வகை கொரோனாவின் மாறுபாடு அடைந்த பிஎப் 7 வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

அதுவும் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோருக்கு சீனாவில் கொரோனா பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம்

மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம்

மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகள் கூட்டம் ஒருபக்கம் அலைமோதுகிறது என்றால் மற்றொரு பக்கம் சுடுகாடுகளில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் கூட செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவில் மக்களுக்கு போதிய அளவு இயற்கையான தடுப்பூசி கிடைக்காமல் இருப்பது உள்பட பல்வேறு காரணிகள் அந்த நாட்டில் கொரோனா ஈவு ஈரக்கமின்றி பரவுவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

3.7 கோடி பேருக்கு கொரோனா

3.7 கோடி பேருக்கு கொரோனா

தினமும் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரவுவதால் கடந்த சில நாட்களாக சீனாவில் பதிவாகி வரும் தினசரி கொரோனா பாதிப்புகள் பற்றிய செய்திகள் உலக அளவில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகக் கூட ஒரு செய்தி வெளியாகி அதிர வைத்தது. இதையெல்லாம் மூடி மறைக்க திட்டமிட்ட சீனா தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட போவது இல்லை என்று கூறியிருக்கிறது.

புதிய வகை கொரோனா

புதிய வகை கொரோனா

கொரோனாவை உலக நாடுகளுக்கு முதன் முதலாக பரப்பி விட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சீனாவின் அஜாக்கிரதையால் மீண்டும் ஒரு ஆபத்து ஏற்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் மாறுபாடு அடைந்த புதிய வகை கொரோனா வெளிப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது மிகவும் கொடிய வைரசாகவும் இருக்கக் கூடும் என்றும் நிபுணர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேரியண்ட்கள் வெளிப்படும்

புதிய வேரியண்ட்கள் வெளிப்படும்

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் ஸ்டுவர்ட் கேம்பல் ரேய் கூறும் போது, கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயரும் பட்சத்தில் வைரஸ் பிறழ்வு (mutation) அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. சீனாவை பொறுத்தவரை அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக இருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதன் காரணமாக புதிய வேரியண்ட்கள் வெளிப்படும் அபாயம் உள்ளது. கொரோனாவின் புதிய அலைகள் உருவாகும் போது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் வெளிப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்" என்றார்.

 பகுதியளவு எதிர்ப்பு சக்தி

பகுதியளவு எதிர்ப்பு சக்தி

கடந்த 2019- ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து கொரோனா முதன் முதலாக வெளிப்பட்ட போது சீனாவை தவிர பிற அனைத்து நாடுகளில் பெரும் பாதிப்பு இருந்தது. அப்போது டெல்டா வகை அடுத்ததாக ஒமிக்ரான் வகை என மாறுபாடு அடுத்தடுத்து அலைகளாக தாக்கத் தொடங்கின. தற்போது வரை ஒமிக்ரான் வகை கொரோனாவின் தாக்கம் உள்ள நிலையில், ஒமிக்ரானில் இருந்து மாறுபாடு அடைந்து இருக்கும் வைரசான பிஎப் 7-தான் தற்போது சீனாவை உலுக்கி வருவது குறிப்பிடத்தக்கது. பகுதியளவு எதிர்ப்பு சக்தியை கொண்ட மக்களை கொண்ட சீனாவால் வைரஸ் மாறுபாடுகள் அடைவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+